உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த அறிவித்தல் வர்த்தமானியில் !

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இந்த சட்டமூலம் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, நேற்று சனிக்கிழமை (16) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டபோது, பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து, அந்த சட்டமூலத்தை திருத்தியமைக்க அரசு தீர்மானித்ததன் அடிப்படையில், பல்வேறு தரப்பினரிடம்  ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்று இந்த புதிய உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *