யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் – தாதிக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயணத் தடை விதித்துள்ளது.

 

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கனூலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்தியசாலை, வடமாகாண ஆளுநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோர் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தினர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் (07) யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்று தாதியருக்கு பயணத்தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *