தையிட்டி விகாரை தொடர்பில் விரைவில் சாதகமான பதில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று (29) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது குறித்தும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக இன்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது குறித்து சாதகமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

 

அதனை தொடர்ந்து மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதேச செயலாளர் மற்றும் நில அளவையாளர் ஆகியோருடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.

 

அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பரிகாரம் காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *