“தையிட்டி விகாரையை தமிழ் பௌத்தர்களிடம் ஒப்படைக்க தயார்.” – பொகவந்தலாவ ராகுல தேரர்

யாழ் – தையிட்டி திஸ்ஸ விகாரையை யாழ்ப்பாண மக்களிடமே ஒப்படைக்க தாம் தயார் என பொகவந்தலாவ ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

எனது நோக்கம், தமிழர்களா, சிங்களவர்களா, முஸ்லிம்காளா, கிறிஸ்த்தவர்களா  என்பதைவிட அனைவரும் மனிதர்கள் என்பதுதான். தமிழ் பௌத்த தேரர் ராகுல ...

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அவர்,

இலங்கையிலே தமிழ் பௌத்தர்களும் இருந்தார்கள் என்ற வரலாறுகள் இருக்கின்றன. திஸ்ஸ விகாரை ஒரு சிறிய விகாரையாக அந்தக் காலத்திலே இருந்திருக்கலாம். இப்பொழுது அந்த விகாரையை பெரிதாக கட்டியிருக்கிறார்கள்.

அந்த விகாரை கட்டப்பட்ட இடத்திற்கு சொந்தக்காரர்கள் இருக்கின்றார்கள் என கூறியிருக்கிறார்கள். எனினும் இதுதொடர்பாக எங்களுக்கு சரிவர தெரியவில்லை.

அவர்களோடு நாங்கள் அமர்ந்து பேசத் தயாராக இருக்கின்றோம். யாழ். மாவட்டத்திலே தமிழ் பௌத்தர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். நாங்கள் ஒரு பரிபாலன சபையை அமைத்து அந்த விகாரையை உங்கள் கையிலே ஒப்படைக்கிறோம்.

நாங்களும் வருகின்றோம். அதன்பிறகு அந்த விகாரை பொது மக்கள் கையில் ஒப்படைக்கப்படும்.

தமிழ் பேசுகின்ற அனைத்து உறவுகளும் சென்று அந்த இடத்திலே உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொள்ளலாம்” – என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *