சிவிலியன்களின் போராட்டங்களை கையாளும் போது அரசாங்கம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன..?

சிவிலியன்களின் போராட்டங்களை கையாளும் போது அரசாங்கம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்தப் பரிந்துரைகள் அடங்கிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதலை மேலும் விரிவுபடுத்துவதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மின்னஞ்சல் முகவரியான rm.director.hrcsl@gmail.com என்ற முகவரிக்கு ஜூன் 9 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும்.

அனைத்து முன்மொழிவுகளும் 1,500 வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிங்கள மொழியிலும் பிரேரணைகள் மற்றும் கருத்துக்கள் “lskoola Pota” எழுத்துகளிலும் தமிழ் பிரேரணைகளை “லதா” எழுத்துகளிலும் ஆங்கில பிரேரணைகள் “டைம்ஸ் நியூ ரோமன்” எழுத்துகளிலும் அனுப்பப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை https://www.hrcsl.lk/hrcsl-issues-recommended-guidelines-on-dealing-with-civilian-protests/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆணையம் அனுப்பியுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *