“நீங்கள் கிறீம் பூசினால் அழகா இருப்பீங்க.” – யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் தொடர்பில் முறைப்பாடு !

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமையின் நிமித்தம் சென்ற யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பேசிய தகாத பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் யாழ். வலய ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றும் ஆண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்குக் கடமையின் நிமித்தம் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்ற ஆண் ஆசிரியர் ஆலோசகர், குறித்த பாடசாலைக்குள் திடீரென சென்று ஆசிரியர்களுடன் ஏதோ ஒவ்வாத வார்த்தைகளைப் பேசியுள்ளார்.

குறித்த நபரை இதுவரை காலமும் யாரென அறியாத அப்பாடசாலை ஆசிரியர்கள், “யார் நீங்கள்” என சில ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது பதிலளித்த குறித்த ஆசிரிய ஆலோசகர், “நான் தீவக வலயத்தில் இருபது வருடங்கள் கடமையாற்றிய பின்னர் யாழ். வலையத்திற்கு வந்த ஆசிரியர் ஆலோசகர்” என்று கூறியுள்ளார்.

திடீரென ஒரு வகுப்புக்குச் சென்று அங்கிருந்து ஆசிரியரிடம் வினாக்களைக் கொடுத்தபோது, சில தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததுடன், “நீங்கள் கிரீம் பூசுவது இல்லையா, பூசினால் அழகாய் இருப்பீர்கள்” எனவும் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *