“அரச எதிர்ப்பாளர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ எனும் முத்திரையைக் குத்தவே புதிய பயங்கரவாத சட்டமூலம்.” – பேராசிரியர் சன்ன ஜயசுமன

“அரச எதிர்ப்பாளர்களுக்கு ‘பயங்கரவாதிகள்’ எனும் முத்திரையைக் குத்தி அவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கவே புதிய பயங்கரவாத சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

“பயங்கரவாதிகளையும், அரச எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக காண்பித்து, அனைத்து அரச எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கான கொண்டு வரப்பட்ட சட்டமே இதுவாகும்.

ஜே.ஆர் ஜயவர்தன அன்றைய ஆட்சியில் செய்ததையே இப்போதைய ஆட்சியாளர்கள் செய்ய எத்தனிக்கின்றனர்.

இந்த புதிய சட்டமூலத்தை எமது சுதந்திர மக்கள் சபை கடுமையாக எதிர்க்கும்.

அரசுக்கெதிராக சாதாரண போராட்டம் நடத்தினால் கூட கைது செய்யப்படும் நிலைப்பாட்டை இந்த சட்டமூலம் காட்டுகிறது.

இதன்மூலம் பிரதி காவல்துறைமா அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுவது நகைப்புக்குரிய விடயமாகும்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முழு நாடும், தொடர்ந்து அவசரகால சட்டத்தின் கீழ் இருக்கும் நிலையை தோற்றுவிக்கும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *