பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களை அடிப்படையாக கொண்ட முற்போக்கானது – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மக்களை அடிப்படையாக கொண்டது முற்போக்கானது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல முன்னணி சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை உள்வாங்கி பொதுமக்களை பாதுகாப்பதற்காக இதனை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளில் காணப்படும்  சட்டங்களை அடிப்படையாகவைத்து உத்தேச பயங்கரவாத தடைச்சட்டங்களை உருவாக்கியுள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை உத்தேச சட்டம் நீக்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளே உத்தேச சட்டத்தில் காணப்படுகின்றன எதிர்கால அரசாங்கங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் எந்த ஏற்பாடுகளும் உத்தேச சட்டத்தில் இல்லை எனவும் விஜயதாசராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *