பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீச்சு !

தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் புமியோ கிஷிடா இன்று காலை பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, நபர் ஒருவர் கையெறி குண்டு ஒன்றை பிரதமரை நோக்கி வீசியுள்ளார்.

இதனையடுத்து, குண்டு வெடித்து புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். குண்டு வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *