“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவுள்ள சஜித் தரப்பு.”- அனுரகுமார திஸாநாயக்க

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொலன்னாவையில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க குறித்த குழு தீர்மானித்துள்ளது என்றும் ஆகவே அவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பணத்திற்காக தமது நாடாளுமன்ற ஆசனங்களை தமது கட்சியினர் தியாகம் செய்ய மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *