அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்!

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்களையும் தலைவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையிலும் அத்தகைய சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்கள் மற்றும் தலைவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்டு, இந்த நாட்டை அழித்தவர்கள் மற்றும் நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எதையும் செய்யாதவர்கள் முன்னிலைப்படுத்தப்படும் நிலை இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர்களை திருடர்கள் என முத்திரை குத்துபவர்கள் தோல்வியடைந்தவர்கள், இது வருந்தத்தக்க நிலை, நாட்டின் மோசமான நிலை, இதே நிலை நீடித்தால் முற்போக்குவாதிகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்றார்.

ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *