யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் கூறியுள்ளனர். ஆனாலும் இரவு 08 மணி வரையில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை பதிவு செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்ப்பிக்குமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளதாகவும் இது தொடர்பில் விரைவான எந்த நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.