அனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நீர்பாய்ச்சல் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி விவசாய அமைப்புகள் மற்றும் பொது அமைப்புக்கள், மக்களை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், 2023-24ஆம் ஆண்டுகளில் பயிர்களுக்கான நீர்ப்பாசன திட்டங்களையும் கிராமிய வீதிகளையும் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
குறைந்தது உளவியந்திரத்தைக் கொண்டு செல்லுகின்ற முக்கியமான பாதைகளையாவது செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். எனது அமைச்சில் 10 மில்லியனுக்கு மேலான பணம் இருக்கின்றது. இந்த பணிகளுக்காக மூன்று மில்லியன் தொகையையாவது ஒதுக்குவேன்.” எனவும் அவர் தெ்துள்ளா.