இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டில் பாடசாலை அப்பியாசப்புத்தகம் தொடங்கி பாடசாலை பொருட்கள் அனைத்தினதும் விலைகள் இரட்டிப்பானது. இந்தநிலையில் பல பாடசாலை மாணவர்கள் பாடசாலை பொருட்களை வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருந்ததது.
இந்த நிலையில் , பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பயிற்சி புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்கள் கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.