“இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்.” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சமஷ்டி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தென்பகுதி அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்க் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
விக்னேஸ்வரன் சிங்களப் பெண்ணை திருமணம் செய்துள்ளார், பிள்ளைகளும் சிங்கள வழியில் வாழ்கின்றனர், தெற்கில் படித்துள்ளார், தெற்கில் தொழில் செய்தார், தற்போது தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஒரு சிறந்த சந்தர்ப்பவாதி.
இவ்வாறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.