சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள் நாட்டை வந்தடைந்துள்ளது.
4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் 20 40 அடி கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவினால் வழங்கப்பட்ட இச்சீருடைத் தொகுதி இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான மாணவர்களின் தேவையில் 70% உள்ளடக்கத்தை முதல் தொகுதி உள்ளடக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.