இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மந்த போசாணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.அதனை நிவர்த்திப்பதற்காக திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பித்து கர்ப்பிணி பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உலக உணவு திட்டம் போன்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் போசாக்கு உணவு பொதிகளை வழங்குவதுடன் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் விசேட நிதியுதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை வலுப்படுத்த முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை திரிபோஷா உற்பத்தி ஒரளவு வழமை நிலைமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உலக உணவு திட்டத்தின் ஊடாக சோளம், சோயா போன்றவற்றின் மூலப்பொருட்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை சிறுவர்களின் இரும்பு சத்து குறைபாட்டை குறைப்பதற்காக உணவில் சேர்க்க வேண்டிய போசாக்கு தூள் பக்கெட்டுக்கள் வழங்கப்படுகிறது. மேலும் 6 மாதம் முதல் 3 வயது பிள்ளைகளுக்கு பகல் உணவுடன் இதனை வழங்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.