போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம – கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி !

போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது.

பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பாரதிபுரம் மத்திய வீதி ஊடக பாடசாலை முன்றலை அடைந்ததும் நிறைவடைந்தது.

குறித்த பேரணியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இடம்பெறும் போதைப்பொருள் விற்பனையை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை இந்த பேரணியில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *