கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் செய்தி ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக கடனாளிகளுடன் உறுதிமொழிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *