நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும் போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தேவைதானா..?  – மல்கம் ரஞ்சித்

நாட்டு மக்களின் பொக்கட்டுக்கள் வெறுமையாக உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தேவைதானா..?  என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக  பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர்.

கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட  சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர். இதன் மூலம் என்ன பயன்ஏற்படப்போகின்றது..? பொக்கட்கள் காலியாகவுள்ளன. இலங்கை உலகின் ஒவ்வொரு நாட்டிடமும்  உதவி கேட்கும் நாடாக மாறியுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் தலைவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர். ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதான் அவர்களின் பொறுப்புணர்வா..? ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்.  போதிய அளவு உணவும் ஊட்டச்சத்தும் இல்லாததால் மாணவர்கள் பாடசாலைகளில் நோய்வாய்படுகின்றனர். ஆனால் தலைவர்கள் மக்களின் துயரங்கள் நெருக்கடிகளை பார்க்காதவர்கள் போல நடந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *