காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விசா நிபந்தனைகளை மீறியதற்காகவே அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து நாட்டைச்சேர்ந்த kayleigh fraser என்பரின் கடவுச்சீட்டே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் விசாரணைக்கு முறைப்பாடளிக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கோட்டா கோ கம தொடர்பில் நாளாந்தம் நடைபெறும் விடயங்களை காணொலியாக வெளியிட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.