இலங்கையில் சடுதியாக அதிகரித்த பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கை – பிரச்சினைகளை தீர்க்க முன்வராத அரசாங்கம் !

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், பெண்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 22 மில்லியன் மக்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்கொள்வதாக இந்திய செய்தி நிறுவனமான ANI சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாடப் போராட்டத்தினால் பல இலங்கையர்கள் வீட்டில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பெண்கள் ஆடைத் துறையில் வேலை இழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக விபச்சார விடுதிகள் உருவாக்கப்பட்டு, பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாலியல் உரிமைகளுக்காக செயற்படும் குழுவான Standup Movement இலங்கை, இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் இலங்கையில் விபச்சாரத்தில் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில் வேலை செய்து பாலியல் தொழிலாளிகளாக வருமானம் ஈட்டுவதாக இது தொடர்பான செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

………………
நாட்டில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடியும் – உணவுத்தட்டுப்பாடும் அதிகரிக்கும் நிலையில் அரசாங்கமோ – அமைச்சர்களோ இதனை கட்டுப்படுத்த எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாது பெட்ரோலுக்கான கூட்டத்தை குறைத்து மத்தியதர வர்க்கத்தின் நோக்கத்தை மட்டுமே தீர்க்க முண்டியடிக்கிறது. ஏழ்மைக்குடும்பங்களை கண்டுகொள்ளாது விட்டதே இந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் காரணமாகும்.
விரைந்து அரசாங்கம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முன்வராவிட்டால் சமூக சீர்கேடுகள் இன்னும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையப்போவதில்லை.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *