இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற நிலையில் இன்று வரை நிதியமைச்சு தொடர்பான சரியான ஒரு அமைச்சரை அரசு நியமிக்கத்தவறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
நிதியமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டதால் தெளிவான – தொடர்ச்சியான கொள்கைகளை நிதியமைச்சால் முன்னெடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் புதிய நிதியமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
இன்று (புதன்கிழமை) காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.