வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 8 பேர் காயமடைந்து வீரகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த சிலர் வீரகெடிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பதற்காக சிலர் வருகை தந்துள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.