சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் – தற்கொலை செய்துகொண்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் – மோசமடையும் இலங்கையின் நிலை !

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இடம்பெற்ற மோதலில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்று இன்று மாலை நிட்டம்புவ பிரதேசத்தில் வழிமறிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் வந்த குழுவொன்று, அப்பகுதியில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் கிட்டத்தட்ட மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்துள்ளதாகவும், சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இடத்தை விட்டு ஓடி அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது ரிவால்வரை எடுத்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *