கொழும்பில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னால் மகிந்தவின் சூழ்ச்சி – அம்பலப்படுத்தினார் தயாசிறி ஜயசேகர !

மகிந்த ராஜபக்ச, தெரிவு செய்யப்பட்ட சில முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரவழைத்து போராட்டம் நடத்த கூறியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளார் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்கு முன்னர் இன்று உத்தேச அறிக்கை வெளியிடுவார் என்ற கருத்துத் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக, பதவி விலக வேண்டாம் என்று கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் தம்மை பதவி விலகவேண்டாம என்று கூறும்போது, தாம் எவ்வாறு பதவி விலகமுடியும் என்பதை சுட்டிக்காட்டவே மகிந்த இந்த போராட்டத்தை நடத்துமாறு கூறியுள்ளதாகவும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *