பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் இன்று கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன்னால் இருந்த மைனா கோ கமா மற்றும் காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகம ஆகிய இரண்டு போராட்ட தளங்களையும் அடித்து நொறுக்கி தீயிட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார, அமைதியான போராட்டக்காரர்கள் அரசாங்கத்தின் குண்டர்களால் தாக்கப்பட்டனர் என கடுமையாக சாடியுள்ளார்.
நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொது மக்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு கண்டனம் வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்