யாழில் போதுமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என கோரிக்கை !

பொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் முண்டியடித்து  செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பொதுமக்களின் வழமையான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதோடு ஏனைய பதுக்கல், சேமித்து வைக்கும் முகமான கொள்வனவிற்கு எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *