“மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்கள் நீதிமன்றம் சென்றது தவறு.” – ஜனாதிபதி கோட்டாபய

கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்தை நாடியமை தவறு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது, முக்கிய விடயங்களில் அரசாங்கத்திற்குள் காணப்படும் பலதரப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக வினவியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு எதிராக குறித்த அமைச்சர்கள் இருந்தால் அவர்கள் பதவி விலகி நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் அவர்கள் அவ்வாறு செய்யாதமை அரசாங்கத்திற்கும் இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் அவ்வாறானதொரு நடவடிக்கையை முன்னெடுத்த போது, நீதியரசர் மார்க் பெர்னாண்டோ இந்த விடயம் தொடர்பாக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *