கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு, முருத்தெட்டுவே தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நிகழ்வை புறக்கணித்திருந்தனர். இந்த நிலையில் , 2019ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வை தொடர்ந்து பல்கலைக்கழகம், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறி்க்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி ,
உலகளாவிய அளவில் சிறந்த பிரஜைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கான தவறான புரிதல் தொடர்பில் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரிடையேயும் ஒழுக்கமான நடத்தை மற்றும் அணுகுமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை கொழும்பு பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை இத்தகைய முக்கியமான சந்தர்ப்பத்திற்குத் தேவையான கண்ணியத்தையும் அலங்காரத்தையும் பராமரிக்க உதவிய வேந்தர், பல்கலைக்கழக பணியாளர்கள், இளம் பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, பல்கலைக்கழகம் நன்றியையும் தெரிவித்துள்ளது. .