இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது, விலைகள் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியும் துறைமுகத்தில் சிக்கியுள்ளது .
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்க் கொண்டு, இலங்கை கடனை அடைக்க முடியுமா என்பது அனைவருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.
மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை வழிநடத்த மக்கள் விடுதலை முன்னணி சக்தி தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.