வீடு திரும்பிய காணாமல் போன சிறுமிகள் – எச்சரித்து அனுப்பிய கொழும்பு மேலதிக நீதவான் !

கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். குறித்த சிறுமிகள் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள், செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த மூன்று சிறுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போனதுடன், இந்த மூன்று சிறுமிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். இந்த நிலையில், மூன்று சிறுமிகளும் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனதாக கூறப்படும் சிறுமிகள் மூவரையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சிறுமிகள் மூவரும் இன்று (10) கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதவான் சிறுமிகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டுக்கு அறிவிக்காமல் வௌியேறினால் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என நீதவானால் குறித்த மூன்று சிறுமிகளும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த முறைப்பாடை எதிர்வரும் 16 ஆம் திகதி அழைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *