மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையம் திறப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஐம்பத்தி நான்கு கட்டில்களைக் கொண்டதான கொரோனா நோயாளிகளுக்கான கொரோனா விடுதி அமைக்கப்பட்டு பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.அன்சார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சனி, வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *