“20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களை கம்பனிகள் அச்சறுத்துகின்றன.” – மயில்வாகனம் உதயகுமார் குற்றச்சாட்டு !

“ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இன்னும் தீரவில்லை எனவும் தொழிலாளர்கள் கம்பனிகளின் கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

சந்தாவை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க நினைக்கும் கம்பனிகளின் திட்டம் நிறைவேறாது எனவும் சந்தா இல்லாவிட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.

20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத தொழிலாளர்களை கம்பனிகள் அச்சறுத்தும் வகையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கம்பனிகளின் இந்த தொழிங்சங்க மற்றும் தொழிலாளர் மீதான அடக்குமுறைக்கு ஒருபோதும் துணைபோக முடியாது எனவும் இதற்கு எதிராக முன்னின்று செயற்படுவோம் என்றும் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *