கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொங்கோ அரசாங்கத்துக்கு கடிதம் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொங்கோ அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொங்கோ அரசின் கொழும்பிலுள்ள தூதரகம் மூலமாக இந்தக் கடிதப்பரிமாற்றம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடிதத்தை வழங்க ஜனாதிபதியே தூதரகத்திற்கு நேரடியாக சென்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கோ அரசின் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேலதிகமாக உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *