தெஹிவளை பகுதியில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமராவை உபயோகித்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
தெஹிவளை – ரொபட் பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கெமராவை உபயோகித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ட்ரோன் கெமராக்களை அருகில் வைத்திருக்கவும், அவற்றை உபயோகிப்பது தொடர்பிலும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அனுமதிப்பத்திரமின்றி ட்ரோன் கெமராக்களை வைத்திருப்பவர்கள் மட்டுமன்றி அனுமதியின்றி அதனை பயன்படுத்துபவர்களும் கைது செய்யப்படுவர் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.
குறித்த இளைஞன் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.