முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கையில்,
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த நினைவு தூபி அந்த இடத்தில் காணப்பட்ட போதிலும், இராணுவம் அந்த நினைவு தூபியை உடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியில், தற்போது அந்த நினைவுத் தூபியை உடைக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.