“கோட்டா அரசாங்கம் செய்த படுகொலைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்து துணைநின்றவர்கள் நினைவுதூபி உடைப்புக்கு பொறுப்பு கூற வேண்டும்.”என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறித்த இடத்துக்கு இன்று காலை வருகை தந்து பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்தெரிவிக்கையில்.,
காவற்துறையினரும் இராணுவத்தினரும் உள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த நினைவுக்கல்லிற்கு பொறுப்புகாவற்துறையினரும் இராணுவத்தினரும்தான் இவர்களுக்கு தெரியாமல் நினைவுக்கல் அகற்றப்பட்டிருக்கமுடியாது.
கோட்டபாய அரசாங்கம் தான் 2009 ஆம் ஆண்டு போர் நடைபெற்றபோது பாதுகாப்பு செயலாளராகவும்,மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்தார்கள். அவர்களால் மேற்கொள்ளப்பட்டது தான் திட்டமிட்ட இனப்படுகொலை இந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை தமிழர்கள் கோரியிருந்தார்கள்.
இந்த நிலையில் நினைவேந்தலை செய்ய முடியாமல் நினைவுக்கல்லினை கூட நாட்டமுடியாமல் இராணுவத்தினராலும் காவற்துறையினராலும் நெருக்கடிகள் கொடுப்பது என்பது கண்டிக்கத்தக்க விடயம் .குறித்த நினைவுக்கல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த தெருவெங்கும் தமிழர்கள் மீது இனவழிப்பு செய்த இராணுவத்தினருக்கு நினைவுச்சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த மண்ணுக்கு சொந்தகாரார்களான தமிழர்களுக்கு அவர்கள் மண்ணில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற இடத்தில் உறவினர்காளால் வணக்கம் செய்யமுடியாதளவிற்கு ஒரு நெருக்கடி நிலமை இருக்கின்றது என்று சொன்னால் அதற்கு காரணம். இலங்கை அரசு தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலைக்கு ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை நடைபெறாமல் உள்ளகவிசாரணைக்கு பத்து ஆண்டுகளாக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வந்ததன் மூலமாக அவர்கள் தப்பித்து வந்தன் விளைவாக தாங்கள் எதை செய்தாலும் அதற்கு பொறுப்புக்கூற தேவை இல்லை என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்ற நிலமையில் தான் இந்த காடைத்தனத்தினை செய்கின்றார்கள்.
குறிப்பாக கோட்டபாஜஅரசாங்கம் பதவியில் இருக்கின்ற பொழுகூட கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் 46.1 தீர்மானம் என்கின்ற உள்ளக விசாரணை தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் எதிரொலியாகத்தான் நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
படையினரும்,காவற்துறையினரும் பதவியில் இருக்கின்ற கோட்டா அரசாங்கம் மட்டுமல்ல அரசாங்கம் செய்த படுகொலைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்து உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு கொடுத்து சர்வதேச சக்திகளுக்கு தேவையாக தமிழர்களின் விவகாரம் பயன்படுத்தப்படுவதற்கு துணைநின்றவர்களும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.