அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்த தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில், அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவை, தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போது பல்வேறு விடயங்களுக்கு அமைச்சர் சாதகமான பதில்களை வழங்கியதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் இதில் இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணி நிர்வாகத்தை மகாவலி அதிகார சபை பொறுப்பேற்பதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ பணித்துள்ளார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும்வரை, எந்த நடவடிக்கைகளையும் தொடர வேண்டாமெனவும் அதிகாரிகளை, அமைச்சர் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *