“இந்துசமுத்திரத்தின் வலிமை மிக்க நாடுகளின் பூகோளஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாரில்லை” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர் ,
சுதந்திரமான நாடு என்ற அடிப்படையில் அனைத்து சர்வதேச சவால்களையும் சந்திப்பதற்கு தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரiவையின் சவால்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய சர்வதேசநாடுகளிற்கு இடையிலான மோதல்களின் ஒரு பகுதியாக விளங்குவதற்கு நான் தயாரில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.