இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 400க்கும் மேற்பட்டோர் பலி! 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 938பேர் பாதிக்கப்பட்டதோடு 442பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 44ஆயிரத்து 577பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 747பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 56ஆயிரத்து 364பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 273பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 26இலட்சத்து 66ஆயிரத்து 466பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *