“ கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர்” – நாரம்பனவே ஆனந்த தேரர்

கொரோனா வைரஸ் தாக்கத்தல் இறந்த முஸ்லீம்களுடைய உடலை தகனம் செய்வது தொடர்பாக அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என பல அரசியல் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்  “ கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் மூலம் சில அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் பெற முயல்கின்றனர்”  என அஸ்கிரிய பீடத்தின் பிரதிபதிவாளர் நாரம்பனவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது என்பது தற்போது தீர்வு காணமுடியாத புதிராக மாறிவிட்டது.

தற்போது காணப்படும் நிலவரத்தின் மத்தியில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பிரிவினைகளை உருவாக்காமல் சட்டத்தினை பின்பற்றவேண்டும். எந்தசக்திக்கும் எந்த செல்வாக்கிற்கும் அடிபணியாமல் ஒரேநாடு ஒரே சட்டம் என்பதனை நடைமுறைப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றுபடவேண்டிய தருணத்தில் மதபதற்றத்தினை அதிகரிப்பதற்கு இந்த விவகாரம் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *