மீசாலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை !

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நேற்றறையதினம் (25.12.2020) தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுமார் 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் வருகை தந்தவர்கள் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது போன்றதான சம்பவங்கள் அண்மைய நாட்களில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றது. அண்மையில் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினையின் போது பின்னிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *