“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்களின் ஜனசாக்கள் எரிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் பேசும் போது,
உடல்களை அகற்றுவது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இந்தவிடயத்தில் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும்.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலகின் 190 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. மருத்துவநிபுணர்கள் குழுவொன்று உலகின் ஏனைய நாடுகள் போல இலங்கையிலும் உடல்களை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா ?என கேள்வி எழுப்பியுள்ளது.
தாங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதாக ஏதாவது ஒரு சமூகம் நினைத்தால் அனைத்து இலங்கையர்களையும் ஐக்கியப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீதியமைச்சர் ஊடகம் ஒன்றில் பேசும் போது “கொரோனாவால் இறந்து போகும் முஜ்லீம்களின் உடல்களை அரசு நிறுத்த வேணடும் என குறிப்பிட்டிருந்ததுடன் இது நிறுத்தப்படா விட்டால் முஸ்லீம் இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக மாற இடமுண்டு எனக்கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.