கொரோனா தடுப்பு மருந்தைப் பெற நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அமெரிக்கா தடையாக உள்ளது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் மத்திய வங்கி கூறும்போது, “உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எழும் பணப் பரிமாற்றப் பிரச்சினைகளால் தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.