தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஆபிரகாம் சுமந்திரன், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து புதிய தூதுவர் டொமினிக் ஃபர்க்லரை இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சுவிட்சர்லாந்து தூதுவருடன் ஐ.நா. தீர்மானம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்
இதேவேளை இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இதன்போது தூதுவர் வாக்குறுதியளித்தார் என்று அவர் மேலும் கூறினார்.