2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15% வரிக்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினீ கவிரத்ன மற்றும் டயானா கமகே ஆகியோர் இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பினர்.
இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க, நாட்டில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இதைவிட முக்கியமானது என்ன? என கேள்வியெழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.