பாடசாலைகள் ஆரம்பிப்பது எப்போது..? – உத்தியோக பூர்வ திகதியை வெளியிட்டது கல்வி அமைச்சு !

பாடசாலைகளை மீண்டும் 23ஆம் திகதி திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 6ஆம் ஆண்டு தொடக்கம் 13 ஆம் ஆண்டு வரையான வகுப்புக்களே இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *