2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முழுமையான விபரம் இதோ !

2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு – செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு சமர்பிப்பித்து உரையாற்றினார்.

வரவு செலவு திட்டம் 2021; முன்மொழியப்பட்ட விடயங்கள்... - Newsfirst

பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன் ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் ,

  • ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஓய்வூதிய வயதை 60 ஆக நிர்ணயிக்க ஊழியர் சேமலாப நிதி சட்டம் திருத்தப்பட வேண்டும்
  • ஒற்றை பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தடை
  • நிதி திருத்தச் சட்டம் அடுத்த ஆண்டு திருத்தப்பட உள்ளது
  • உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் பின்னர் நிர்வாகமற்ற அரச அதிகாரிகளுக்கு மேலதிக தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்
  • அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதிக்கான வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் 7% வரை குறைக்கப்படும்
  • 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும்
  • வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க வலுவான புதிய சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டும்
  • வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க நடவடிக்கை
  • இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கு மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு அளிக்க தீர்மானம்
  • சுற்றுலாத் துறையினரால் பெறப்பட்ட கடன்களுக்கான தற்காலிக தடை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய வங்கியால் நீடிக்கப்படும்
  • கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் இலங்கையின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்
  • நாட்டில் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • மக்கள் தொகையில் 54% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கவும் அதற்காக 1000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம்
  • கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் இயற்கை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானம்
  • 600 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் கட்ட அரசாங்கம் நடவடிக்கை
  • இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்
  • லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை
  • தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் 1000 ரூபாயாக அதிகரிக்க தீர்மானம்
  • உலர் மீன் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான வரியை அதிகரிக்க தீர்மானம்
  • மீன்வளத் தொழிலுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபாய் கடன் வழங்க முன்மொழிவு
  • பால்மா இறக்குமதிக்கு பதிலாக உள்ளூர் பால் உற்பத்திக்காக அரசாங்கம் நடத்தும் பண்ணைகளுக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை
  • விவசாய நோக்கங்களுக்காக விளைநிலங்களைப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க விவசாய அபிவிருத்தி சட்டத்தில் திருத்தம்
  • விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் அதேவேளை மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்த் தடை
  • விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு கொள்முதல் விலை உத்தரவாதம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானம்
  • வெளிநாடுகளில் பணிபுரிந்த 45,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை
  • வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
  • சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்
  • 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு (முதலாளியின் பங்களிப்பு 0.25) காப்பீட்டுத் திட்டம்
  • தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானம்
  • 100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்
  • தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
  • ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானம்
  • சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்க தீர்மானம்
  • தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம்
  • தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.
  • பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
  • தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை
  • இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
  • அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானம்
  • விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்கு
  • தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானம்
  • மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும் . போன்ற விடயங்களை பாராளுமன்றில் பிரதமர் முன்வைத்திருந்தார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *