உலகமே நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது யார்? என தொலைக்காட்சி, இணையதளத்தில் குவிந்திருந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் எங்கு இருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் சிறிது நேரத்திற்கு முன்னதாக திட்டமிடப்படாத பயணமாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
அவர் வெர்ஜினியா மாநிலத்தின் ஸ்டெர்லின் பகுதியில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ப் மைதானத்திற்கு சென்றுள்ளார். பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அவர் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தார்.

அவர் வழக்கமாக பயன்படுத்தும், ‘மேக் அமெரிக்கா கிரேட் ’ என்ற வாசகம் அடங்கிய தொப்பியை அவர் தனது தலையில் வைத்துக்கொண்டு கோல்ப் விளையாடினார்.
கோல்ப் விளையாடி முடித்த உடன் வெள்ளைமாளிகை நோக்கி வந்த டிரம்பிற்கு அவரது ஆதரவாளர்கள் ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ என கோஷமிட்டனர். அதேபோல் ஜோ பைடன் ஆதரவாளர்களோ டிரம்பை நோக்கி ‘தோல்வியாளர்’ என கோஷமிட்டனர்.